எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உரிமம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து: இழப்பீடு வழங்காதவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனத்தை ஓட்டி ஒருவரை காயப்படுத்திவிட்டு, நீதிமன்றம் விதித்த இழப்பீட்டை வழங்காதவர் வெள்ளிக்கிழமை

Updated On :7 நவம்பர் 2014, 6:14 pm IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனத்தை ஓட்டி ஒருவரை காயப்படுத்திவிட்டு, நீதிமன்றம் விதித்த இழப்பீட்டை வழங்காதவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அழகுதேவேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி வேலம்மாள் (40). கூலி வேலை செய்து வருகிறார்.

வேலை முடித்து நூர்சாகிபுரம்-பொட்டல்பட்டி சாலையில் 14.10.2003-ம் தேதி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் வேலம்மாள் மீது மோதி காயம் ஏற்பட்டு, இவர் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக வேலம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார்.

வாகனம் ஓட்டி வந்த ராம்குமாருக்கு வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாமல் இருந்துள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரா, 21.10.09-ம் தேதி வேலம்மாளுக்கு, ராம்குமார் இழப்பீடாக ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் அவர் இழப்பீடு வழங்கவில்லை. வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.24 ஆயிரம் வந்துள்ளது. இதனையடுத்து வேலம்மாள், நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தார்.

 மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், 29.10.14-ம் தேதி, ராம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் ராம்குமாரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், ராம்குமாரை இம் மாதம் 30-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.