விருதுநகர் அருகே டவர் அமைக்கும் இடத்தில் மின்வயரை திருடிய மர்ம நபர் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(23). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக இருந்து வரும் நிலையில், டவர் அமைக்கும் பணியினையும் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல் விருதுநகர் அருகே ஐ.சி.ஏ காலனியில் நடந்து வரும் டவர் பணிகளைச் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு வைத்திருந்த காப்பர் வயரை யாரோ மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாராம். இதைப்பார்த்து பொறியாளர் துரத்திய நிலையில் உடனே பைக்கில் தப்பியோடினாராம். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் பொறியாளர் யோகேஸ்வரன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மின்வயரை திருடிச் சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.