பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மனநல பயிற்சி

பள்ளி தலைமையாசிரியர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனோவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் மனநல பயிற்சி அளிக்கப்படுகிறது.
Updated on
1 min read

பள்ளி தலைமையாசிரியர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனோவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் மனநல பயிற்சி அளிக்கப்படுகிறது.

விருதுநகர் அருகே காளீஸ்வரி கல்லூரியில் வருகிற 21-ம் தேதி சத்யசாய் அறக்கட்டளை சார்பில் மனநல பயிற்சி நடைபெறுகிறது. இதில், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இதில், சென்னை மனோவியல் துறை நிபுணர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மனநல மருத்துவர்கள் பங்கேற்று இப்பயிற்சியை அளிக்க இருக்கின்றனர்.

மேலும், தேர்ச்சி விகித்தை அதிகப்படுத்துவதற்கு ஒவ்வொரு மாணவ, மாணவிகளையும் எவ்வாறு தயார் படுத்த வேண்டும் என்பது குறித்தும் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட இருப்பதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com