மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் தீ குளிப்பு

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பாண்டியம்மாள்  என்ற பெண் திடீர் என தீ குளித்ததால் பெரு பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பாண்டியம்மாள்  என்ற பெண் திடீர் என தீ குளித்ததால் பெரு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்க வந்தார். உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று  காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் தீ குளித்தார். இதனால் அவரது ஆடையில் தீ பரவி உடலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீ குளித்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com