விருதுநகர் நகராட்சியில் முறைகேடாக பாதாளச்சாக்கடை இணைப்பு கொடுத்தவருக்கு ரூ.23 அபராதம் விதித்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சியில் இரவு நேரங்களில் கட்டையாபுரம் பகுதியில் முறைகேடாக உறுப்பினர்கள் துணையுடன் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்காக சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்காலையும் உடைத்து சேதப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், அப்பகுதியில் ஒரு வீட்டிற்கு இணைப்பு கொடுப்பதற்காக சாலையையும், கழிவு நீர் வாய்க்காலையும் உடைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அதை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி கூறியதாவது:
கட்டையாபுரம் பகுதியில் முறைகேடாக இணைப்பு கொடுப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தோம். அதில், கட்டையாபுரம் நடராஜன் என்பவர் வீட்டிற்கு நகராட்சியில் அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தனர். உடனே அதை தடுத்து நிறுத்தி சாலையை சேதப்படுத்துதல், கழிவு நீர் வாய்க்கால், சிமெண்ட் சாலையை உடைத்தல் போன்றவைகளுக்காக மொத்தம் ரூ.23 ஆயிரம் அபராதம் விதி்த்து மேற்படி நபருக்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.