நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள மேல் பகுதியில் இருந்து, பகல் ஒரு மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கீழே விழுந்து மூளை சிதறி பலியானார். மேலிருந்து கீழே தவறி விழுந்தாரா அல்லது, தற்கொலை செய்ய குதித்தாரா என்று தெரியவில்லை என அருகில் இருந்தவர்கள் கூறினர்.
இன்று விஜயதசமி என்பதால், நாமக்கல் நரசிம்மர் குடைவரைக் கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. சரியாக நரசிம்மர் சந்நிதி வெளிப்புறத்தில் இந்த நபர் விழுந்து உயிரிழந்ததால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.