காஞ்சிபுரம் அருகே சின்னையன் சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்று 3 வது சனிக்கிழமை என்பதால், காஞ்சிபுரத்தில் இருந்து நீர்வள்ளூர் கிராமத்துக்கு சாமி கும்பிட பாபு (35) என்பவர் தன் மனைவி பாரதி (30) குழந்தை ஜீவானந்தம் (ஒன்றரை வயது) மற்றும் ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பின்னால் சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, இவரது வாகனத்துடன் மோதியதில், ஒன்றரை மாதக் குழந்தையைத் தவிர மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.