தமிழகம் முழுவதும் மதுவிலக்கினை அமல்படுத்தக் கோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதை ஒட்டி, நெல்லை மாவட்டம் தென்காசி வேன் நிறுத்தம் அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவர்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். பின்னர் அந்த மாணவர்கள், மற்றும் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதே இடத்தில் கடந்த 10 நாட்களாக அதிமுக.,வினர் ஜெயலலிதா கைதை எதிர்த்து, கொட்டகை அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.