

விருதுநகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் முன்புறம் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் வள்ளியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். இதில், ஆத்துப்பாலம் பகுதியில் வெளியூர்களுக்கு பேருந்து ஏறிச் செல்லும் வகையில் நிறுத்தம் இருக்கிறது. அதனால் எந்த நேரமும் பயணிகள் அதிகம் பேர் பேருந்து ஏறிச் செல்வதற்காக நிற்கின்றனர். அப்போது, குடிகாரர்களின் தொல்லையால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுபோன்றவைகளை தடுக்கும் வகையில் இக்கடையை உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து அகற்றம் செய்வதாக உறுதியளித்தனர். பின்னர் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.