மின்விளக்கு கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிச்சைமாரி (30). இவர் மலையேற்ற வீரர் எனக் கூறப்படுகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உயர்கோபுர
Updated on
1 min read

மின்விளக்கு கோபுரத்தில் ஏறி மதுரையில் இளைஞர் வியாழக்கிழமை காலை தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிச்சைமாரி (30). இவர் மலையேற்ற வீரர் எனக் கூறப்படுகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸார் விரைந்து வந்து இளைஞரை கீழே இறங்கிவருமாறு கூறினர்.

நீண்டநேரத்துக்குப் பின் கீழே இறங்கிய பிச்சைமாரியிடம் விசாரித்தபோது, மலையேற்றத்தில் சிறந்து விளங்கும் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறினார். இதையடுத்து அவரை தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com