விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டட பணிகளுக்காக ரூ.4.29 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இவைகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்க கூடுதல் வகுப்பறைகள், பிளஸ்2 அறிவியல் பாட பிரிவுகள் பயனடையும் வகையில் ஆய்வுக் கூடம், நூலகம், குடிநீர், சுகாதார வளாகம் மற்றும் சுற்றுச் சுவர் வளாகம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக நபார்டு வங்கி மூலம் மொத்தம் ரூ.247.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், விருதுநகர் மாவட்டத்தில் 4 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அதில், சாத்தூர் அருகே சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பளிக்கு ரூ.1.24 கோடியும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.25 கோடியும், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.08 கோடியும், எஸ்.அம்மாபட்டி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.72.92 லட்சம் என மொத்தம் 4.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் தொடங்கி நடைபெற இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

