எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாளையங்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே இளைஞர் செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :28 அக்டோபர் 2014, 2:12 pm

முத்துக்குமார்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே இளைஞர் செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கொமந்தானூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மகேஸ் (28). மள்ளர் மீட்புக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியான இவர், நிலம் வாங்கி-விற்கும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், பர்கிட்மாநகரத்துக்கு தனது பைக்கில் மகேஸ் செவ்வாய்க்கிழமை சென்றாராம். அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது மகேஸை சுற்றி வளைத்த கும்பல் அரிவாளால் வெட்டியதாம்.

இதில் பலத்த காயமடைந்த மகேஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.