விருதுநகர் அருகே ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
விருதுநகர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மகள் தனப்பிரியா(15). இவர் அருகில் உள்ள ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றாராம். அங்கு ஆங்கில பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் பாடத்தை ஒழுங்காக படிக்கவில்லையெனக் கூறி மாணவியை திட்டியதோடு, வகுப்பறைக்கு வெளியே நிற்கும் படி கூறினாராம்.
இதனால் மனம் உடைந்த மாணவி, மதியத்திற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லையென்பதை அறிந்த மாணவி விஷ எலிமருந்தை உட்கொண்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் பார்த்து உடனே மாணவியை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, அம்மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பூமிநாதன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.