விருதுநகர் மாவட்டத்தில் அருந்ததியர் மக்களின் அடிப்படை பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அருந்தமிழர் விடுதலை இயக்கத்தினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சு.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.பெருமாள் முன்னிலை வகித்தார். அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கு.ஜக்கையன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், சோலைச்சேரியில் அருந்ததியர் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாறுகால் பிரச்னையை தீர்க்க வேண்டும். சேத்தூரில் இம்மக்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள அரசு மதுபானக் கடையை உடனே அகற்ற வேண்டும். ராஜபாளையம் பொம்மியம்மன் நகர் கோவில் இடத்தை அருந்ததியினர் மக்களுக்கு பட்டா முடித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் மரியதாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஞானகுரு, மாவட்ட செயலாளர் சேகர், மகளிரணி தலைவி பெருமாளம்மாள் உள்ளி்ட்ட அருந்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.