விருதுநகரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

விருதுநகரில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதி மன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

விருதுநகரில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதி மன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட  வழக்குரைஞர் மற்றும் அவரது உறவினர்கள் 10 பேரை போலீஸார் தாக்கியதில் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வெளியில் வந்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com