தூத்துக்குடியில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையாளர் கைது

தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக வேலைபார்த்து வருபவர் சுபா.
Updated on
1 min read

தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக வேலைபார்த்து வருபவர் சுபா.

இவர், அற்புதராஜ் என்பவரிடம் கூட்டுப்பட்டா வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து, அற்புதராஜ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த நில அளவையைர் சுபாவிடம் புதன்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அற்புதராஜ் வழங்கியபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நில அளவையர் சுபாவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com