விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த 16 பெண் தொழிலாளர்கள் உள்பட 24 பேர் வரையில் திங்கள்கிழமை காயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு வழக்கம் போல் காலையில் ராமசாமிபட்டியிலிருந்து தொழிலாளர்களை வேனில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே திருத்தங்கல்லிருந்து பொம்மையாபுரம் பட்டாசு ஆலை நோக்கிச் சென்ற வேனும் கன்னிசேரி பிரிவு சாலையில் வரும் போது நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் வாகனங்களில் பயணம் செய்த துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கற்பகவல்லி(30), திருத்தங்கல் இலஞ்சியம்(30), பள்ளப்பட்டி சுப்புலட்சுமி(35), திருத்தங்கல் அழகுலட்சுமி(18), கருப்பாயி(40) உள்ளிட்ட 24 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் அறிந்த வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த 7 பேரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

