வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் :  கிராம நிர்வாக அலுவலர் கைது

ஆம்பூர் அருகே பட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :28 ஏப்ரல் 2015, 10:38 am

ஆம்பூர் அருகே பட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூர் அருகே மணியாரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் மகன் விவசாயி சீதாபாதி.  இவருடைய நிலத்தில் உள்ள கிணற்றில் பம்ப்செட் அமைக்க மின் இணைப்பு பெற முயற்சித்துள்ளார்.  பட்டாவில் அவருடைய பெயர் இல்லாததால் மின்வாரிய அதிகாரிகள் பட்டாவில் பெயர் இருந்தால் தான் மின் இணைப்பு தர முடியும்.  அதனால் பட்டாவில் பெயர் சேர்த்துவிட்டு பிறகு அதனை கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.

அதன்படி கடந்த ஏப்.6-ம் தேதி குமாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாவை (33) சந்தித்து பட்டாவில் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளார்.   பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென ராஜா கேட்டுள்ளார்.   ஆனால் அவ்வளவு பணம் தரமுடியாது என அவர் கூறியுள்ளார்.  ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் சேர்க்க முடியுமென அவர் கூறியுள்ளார்.  அதைத் தொடர்ந்து அன்றே ரூபாய் ஆயிரத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். 

பிறகு பட்டாவில் பெயர் சேர்ப்பது சம்பந்தமாக பல முறை கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து அதுகுறித்து கேட்டுள்ளார்.  ஆனால்  அவர் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தான் அதற்கான நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினாராம்.  அதனால் சீதாபதி வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸôரிடம் புகார் அளித்துள்ளார்.  புகாரை பெற்றுக் கொண்ட போலீஸôர் மீதி ரொக்கம் ரூ.4 ஆயிரத்தை ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகளாக சீதாபதியிடம் கொடுத்து அனுப்பினர்.  அவரும் கிராம நிர்வாக அலுவலரை பார்க்க செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். 

அவர் கேட்ட ரொக்கம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.  அதைத் தொடர்ந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் பழனி, திருநாவுக்கரசு, அசோகன் மற்றும் போலீஸார் அங்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் நாட்றம்பள்ளி அருகே மல்லப்பல்லி கிராமத்தை சேர்ந்த ராஜவை கைது செய்தனர்.  அவரிடமிருந்து ரொக்கப் பணம் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.