விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

விருதுநகரில் இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். இதில், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவும், கல்வி உதவி தொகை வழங்கவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com