ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக். 6-ம் ஆண்டு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு வளாக நேர்காணல்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2015, 10:07 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான சிறப்பு 6 ஆண்டு பி.டெக். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் புதன்கிழமை துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் வரவேற்றார். சென்னை, செர்வ் சென்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபா வளாக நேர்காணலை நடத்தினார். இதில் சிறப்பு பிரிவின் 17 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தேர்வுகளுக்குப் பின்னர் இறுதியாக 5 பேர் வேலைக்கு தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இவர்கள் ஆகஸ்டு 2-வது வாரத்தில் சென்னையில் பணியில் சேர வேண்டும்.

பணி நியமனம் பெற்ற மாணவர்களை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.