திருச்செந்தூரில் காங்கிரஸார் உண்ணாவிரதம்

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on
Updated on
1 min read

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமையன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேரடி திடலில் வைத்து நடந்த உண்ணாவிரதத்துக்கு வட்டார தலைவர் ச.குருராமன் தலைமை வகித்தார். நகரத்தலைவர்கள் திருச்செந்தூர் குறிஞ்சி சண்.சுரேஷ், ஆறுமுகநேரி எல்.ராஜாமணி, கானம் பாஸ்கர்,இளைஞர் காங்கிரஸ் எஸ்.அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் பாராளுமன்ற அமைப்பாளர் சு.கு.சந்திரசேகரன், மாநில பேச்சாளர் ராஜு, எஸ்.ஸி.எஸ்.டி. பிரிவு மாவட்டத்தலைவர் எஸ்.பேச்சியம்மாள், முன்னாள் மாவட்ட தலைவர் எம்.கே.அய்யாக்குட்டி, வட்டார தலைவர் யோ.ராஜாமணி, நகரத்தலைவர் சி.சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்ட செயலர் கே.எஸ்.ஜெயந்திநாதன், வட்டார துணைத்தலைவர் ச.மா.கார்க்கி, நகர செயலர் சஞ்சய் ஆறுமுகம், நகர பொருளாளர் எ.கே.முகேஷ், நகர துணைத்தலைவர்கள் விஸ்வநாதன் பண்ணையார், முருகேந்திரன், பட்டுகனி, டிசிடியூ சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இளைஞர் காங்கிரஸ் நகர செயலர் எஸ்.எ.சரத்குமார் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட செயலர் எஸ்.ஆனந்தவல்லி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com