விருதுநகர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதித்த இளம்பெண் சாவு

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகள் மஞ்சுளா(15). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்து வந்ததாம். அதைத் தொடர்ந்து காய்ச்சல் கடுமையாக
Updated on
1 min read

விருதுநகர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகள் மஞ்சுளா(15). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்து வந்ததாம். அதைத் தொடர்ந்து காய்ச்சல் கடுமையாக இருந்ததால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது அறிந்து மேல் சிகிச்சைக்காக சனிக்கிழமை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலன் தராத காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com