விருதுநகர் அருகே மனநிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் மாயமானதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விருதுநகர் பெருமாள்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த நல்லசாமியின் மகன் நாகராஜ்(35). இவர் மனநிலை சரியில்லாத நிலையில் பெற்றோர்களின் பராமரிப்பில் இருந்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற நாகராஜ் இதுவரையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, நல்லசாமி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் தேடியும் எங்குள்ளார் என்கிற விவரம் தெரியவில்லையாம். இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் நல்லசாமி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நாகராஜை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.