விருதுநகர் அருகே கோயில் கும்பகலசத்தை திருட முயன்ற முதியவர் கைது

விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(57). இவர் இப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் இரவு பாதுகாவலராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் இரவு பணியில்
Updated on
1 min read

விருதுநகர் அருகே கோயில் கும்பகலசத்தை திருட முயற்சித்த முதியவர் ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(57). இவர் இப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் இரவு பாதுகாவலராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவில் சாலையின் மீது பிள்ளையார் திருக்கோயிலில் மேலே எறி கும்பகலசத்தை யாரோ ஒருவர் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாராம்.

இதை, மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே இருந்து பார்த்த பாதுகாவலர் கிருஷ்ணன் உடனே சத்தம் போட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதற்குள் வேகமாக இறங்கி தப்பியோட முயற்சிக்கும் போது பொதுமக்கள் பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் இரவு ஒப்படைத்தனர். மேலும், அவரிடம் விசாரணை செய்ததில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜீவ்(65) என்கிற விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com