ஆம்பூர் அருகே கார்-லாரி மோதி விபத்து: வியாபாரி பலி, 4 பேர் படுகாயம்

வங்கிகளில் வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்ஸ் வங்கி அறிவித்துள்ளது.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  3 பெண்கள் உட்பட 4 பேர் காயமடந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் வியாபாரி ரவிக்குமார் (55). இவரது மனைவி மகேஸ்வரி. இருவரும் தங்களது மகள் மற்றும் மருமகனை சென்னை விமானநிலையத்தில் விட்டு விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்களுடன் உறவினர்கள் ராஜேஷ் மனைவி நித்யா, ஜெயராஜ் மனைவி ஜெயா ஆகியோர் இருந்தனர்.  காரை மொரப்பூரை சேர்ந்த டிரைவர் இளையராஜா என்பவர் ஓட்டினார்.

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது கார் லாரியின் பின்புறம் மோதியது. அதில் காரில் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் உடனிருந்த நித்யா, ஜெயா, மகேஸ்வரி, டிரைவர் இளையராஜா ஆகியோர் பலத்த காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com