தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதன்கிழமை மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதன்கிழமை மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் லியாகத் அலி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில், ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை  நவீன்ப்படுத்தி, உடனே இயக்க வேண்டும். இந்த ஆலைக்கு 100 ஆண்டுக்கு தேவையான  சுண்ணாம்புக்கல் இப்பகுதியில் இருக்கிறது. அதனால் சிமெண்ட் ஆலையை தொடர்ந்து நடத்த நடவடிக்கையும், இங்கு பணியாற்றியவர்களை அரியலூருக்கு மாற்றம் செய்வதை கைவிடவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com