ஸ்ரீரங்கத்தில் வாக்குக்கு பணம் கொடுக்க முயன்ற 4 பேர் கைது: எதிரணியினர் தாக்கியதில் 3 பேர் காயம்

ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியில் ஒரு கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில் அவர் அப்பகுதிக்குச் சென்ற போது திமுக கொடி கட்டிய காரில்
ஸ்ரீரங்கத்தில் வாக்குக்கு பணம் கொடுக்க முயன்ற 4 பேர் கைது: எதிரணியினர் தாக்கியதில் 3 பேர் காயம்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியில் ஒரு கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் அவர் அப்பகுதிக்குச் சென்ற போது திமுக கொடி கட்டிய காரில் இருந்த சில நபர்கள் ரூபாய் 52 ஆயிரம் பணத்துடன் இருந்தது தெரிய வந்தது.

அந்த வாகனத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்,  ரவி (56), தினகரன் (43), ஆறுமுகம் (55), ராமஜெயம் (24) என்பதும், இவர்கள் நான்கு பேரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதயைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரிய வந்துள்ளது.

இவர்கள் நான்கு பேரையும் தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மனோகரன் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனிடையே அப்பகுதிக்கு வந்த அதிமுகவினர் சிலர் காரில் வந்து பணம் கொடுக்க முயன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராஜ்மோகன், ரமேஷ், இதையத்துல்லா ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இவர்களும் திருவண்ணாமலையைச் சேர்ந்தர்கள்தான். இவர்கள் உடனடியாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கொடி இருந்த வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com