விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமலைக்காரி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் அதிகாலை முதல் விக்னேஷ்வரபூஜை, தேவதா அனுக்ஞை, புன்னியாகவாஜனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா சூக்த ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதணை உள்ளிட்ட சிறப்பு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
அதையடுத்து, காலையில் 9 மணிக்கு திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து, ஸ்ரீமாலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்ட பின் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், பிற்பகலில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.