விருதுநகர் அருகே பைக் மீது கார் மோதல்: 2 பேர் படுகாயம்

திருநெல்வேலி பகுதியில் சந்திப்பு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரகுபதிராஜா(45). இவர் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை
Updated on
1 min read

விருதுநகர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி பகுதியில் சந்திப்பு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரகுபதிராஜா(45). இவர் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை தனது சொந்தக் காரில் திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது, விருதுநகர்-வடமலைக்குறிச்சி 4 வழிச்சாலை பாலம் அருகே செல்லும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்களான மாரிமுத்து(28), மணிமாறன்(32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com