விருதுநகரில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர் பாத்திமாநகரில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். பின்னர்
Updated on
1 min read

விருதுநகர் பாத்திமாநகரில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து வைத்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

விருதுநகர் நகராட்சியில் உள்ள 22-வது வார்டில் பாத்திமாநகர் 60 அடி சாலையில் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது, தூர்ந்து மேடாகி அதிகளவில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல், நகராட்சிப் பகுதியில் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் அமைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு இலவச குடிநீர் இணைப்பும் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. எனவே இதுவரையில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதனால், இப்பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர் மற்றும் குடிமை மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கவும் உள்ளிட்ட பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் முருகன் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மோகன், உதவி பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இக்குறிப்பிட்ட பணிகளை செய்து கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com