சிவகாசிஅருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி காயம்

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் கருந்திரிகளை துண்டாக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஆலையின் மேற்பார்வையாளரை கிழக்கு
Updated on
1 min read

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் கருந்திரிகளை துண்டாக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஆலையின் மேற்பார்வையாளரை கிழக்கு போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் காளியப்பன்(65) என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு  வழக்கம் போல் புதன்கிழமை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒர் அறையில் மாலை 3 மணிக்கு இதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(45) என்பவர் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, கருந்திரியில் ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், தொழிலாளி ராமமூர்த்தி படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் ஆலையின் மேற்பார்வையாளர் தங்கவேலை கைது செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com