விருதுநகருக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வருகை

விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் கேவிஎஸ் பள்ளிகளின் 125 ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சியிலும் முன்னாள்
Updated on
1 min read

விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் கேவிஎஸ் பள்ளிகளின் 125 ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சியிலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வருகிற 14-ம் தேதி பங்கேற்க இருக்கிறார்.  

வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10.30 மணிக்கு மாணவிகளுடன் கலந்துரையால் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் ஊக்கப்படுத்துதல் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.அதைத் தொடர்ந்து அன்றைய நாளில் விருதுநகர் கேவிஎஸ் பள்ளியில் காலை 11 மணிக்கு பங்கேற்று 125-வது ஆண்டு விழா சிறப்பு மலரையும் வெளியிட இருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியின் செயலாளர் ஆறுமுகம் மற்றும் ஷத்திரிய வித்யாசாலா கமிட்டியின் செயலாளர் மதன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com