விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் நிலத்தை பறிக்கும் அவசர சட்டத்தை திரும்ப பெறக்கோரி செவ்வாய்கிழமை சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதில், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு ஒன்றியத் தலைவர் மங்கையர்க்கரசி தலைமையில் நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் விவசாயிகள் சங்கத்தை 9 பேரைச் கைது செய்தனர்.
இதேபோல், காரியாபட்டியில் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியத் தலைவர் அம்மாசி தலைமையில் நடந்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு வட்டாரச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 21 பேரையும் என மொத்தம் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.