திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

ராமேசுவரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் நீராடினர்

ராமேசுவரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு செவ்வாய் கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர். உலக புகழ்பெற்ற சிவஸ்தலம் அமைந்த புண்ணிய பூமியில் ஆயிரக்கணக்கான

Published On :

ராமேசுவரத்தில் தை அமாவாசையை நாளான செவ்வாய் கிழமை அதிகாலையில் பக்தர்கள் அக்னிதீர்த்தக்கடலில் நீராடி பின்னர்  திருக்கோயிலில் சுவாமி,அம்பாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு செவ்வாய் கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர். உலக புகழ்பெற்ற சிவஸ்தலம் அமைந்த புண்ணிய பூமியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்பனபூஜைகள்,தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்து திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர்.பின்னர் சுவாமி அம்பாள் சன்னதியில்  பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக பகல் முழுவதும்  திருக்கோயில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும்,தீபாரதணை வழிபாடுகளும் நடைபெற்றன. திருக்கோயிலை சுற்றி பக்தர்களின் கூட்டங்கள் வெள்ளம்போல் காணப்பட்டன.பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்டகண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபட்டிருந்தனர்.

திருக்கோயிலை சுற்றி நான்குரத வீதிகள்.அக்னீதீர்த்தகடல் பகுதிகள்,சன்னதிதெருப்பகுதிகள்,திருக்கோயிலின் உள்பிரகாரங்கள் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா மூலம் போலீஸார் கண்காணித்து வந்தனர். சுவாமி சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த திருக்கோயில் சார்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த திருக்கோயிலின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.பக்தர்களின் வசதிகளுக்காக அன்னதானம்,பிரசாதங்கள் உள்பட அனைத்து முன் ஏற்பாடுகளையும் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,உத்தரவின் பேரில் உதவிக்கோட்டமேலாளர் மயில்வாகணன், கணக்கீட்டாளர் சண்முகநாதன், கண்காணிப்பாளர் ராஜங்கம்,ககாரின்ராஜ், திருக்கோயில் அலுவலர்கள் கமலநாதன்,மாரியப்பன்,செல்லம்,குமரேசன், மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.