ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர், துப்புரவு பணியாளர் காலியிடங்களுக்கு  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையலர், பகுதி நேர துப்புரவு பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையலர், பகுதி நேர துப்புரவு பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

   இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் சனிக்கிழமை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நலத்துறை அலுவலரால் மேற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பதிவு மூப்பு விவரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 1.7.2014 அன்றைய நாளில் ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமான இப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

    சமையலர் பணிக்கு: முன்னுரிமையுடையோர் ஆதிதிராவிடர்(அருந்ததியினர் மற்றும் ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதரவற்ற விதவை-31.12.2014,  ஆதிதிராவிடர் கலப்பு திருமணம் புரிந்தோர்-17.11.2011, பழங்குடியினர்-31.12.2014 வரையும். முன்னுரிமையற்றோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) இருபாலரும்-4.12.1997, பெண்கள் மட்டும்-12.8.2005, ஆதிதிராவிடர் முன்னுரிமையற்றோர் (இருபாலரும்)-29.7.1998 வரையும் இருக்க வேண்டும்.   

பகுதிநேர துப்புரவு பணியாளர்: முன்னுரிமையுடையோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) மற்றும் முன்னிரிமையுடையோர்(ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதிதிராவிடர் முன்னுரிமையுடையோர் (ஆதரவற்ற விதவை)-31.12.2014, ஆதிதிராவிடர் முன்னுரிமையுடையோர்(கலப்பு திருமணம் புரிந்தோர்)-17.10.2011, பழங்குடியினர் முன்னுரிமையுடையோர்-31.12.2-14 வரையும். முன்னுரிமையற்றோர்-ஆதிதிராவிடர்(அருந்ததியினர் பெண்கள் மட்டும்)27.10.1997, ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) இருபாலரும்-16.8.1995, ஆதிதிராவிடர் (பெண்கள் மட்டும்)-26.6.2001, ஆதிதிராவிடர்(இருபாலரும்)-14.10.1998 வரையும் பதிவு மூப்பு இருக்க வேண்டும்.
 
மேற்காணும் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் மட்டுமே பரிந்துரைக்கப்பட இருக்கின்றனர். அதனால், இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றுகள் மட்டும் குடும்ப அட்டை ஆகியவைகளுடன் சூலக்கரை தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com