விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் வருகிற 30ம் தேதி(வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் வருகிற 30ம் தேதி(வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள  செய்தி:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு முகமையின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தரும் வகையில் விருதுநகர் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 2 மணி வரையில் நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். அதனால் இம்மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். 

இம்முகாமில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு அன்றைய தினமே பணிக்கான உத்தரவும் அளிக்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பலர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. அதனால் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று தங்களின் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com