விருதுநகர் அருகே பைக்கில் கருந்திரி கட்டுக்களை கடத்தியவர் கைது

விருதுநகர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை  கன்னிசேரி-மத்தியசேனை சாலையில் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கடத்திச் செல்லப்படுவதாக வச்சக்காரப்பட்டி
Updated on
1 min read

விருதுநகர் அருகே கருந்திரி கட்டுக்களை கடத்தியவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை  கன்னிசேரி-மத்தியசேனை சாலையில் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கடத்திச் செல்லப்படுவதாக வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அதிகாலையில் காவல் சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இச்சாலையில் வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதிலிருந்த சாக்குப்பையில் 300-கருந்திரி கட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே அவரிடம் விசாரித்ததில் விருதுநகர் அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமாணிக்கத்தின் மகன் வேளாங்கண்ணி(32) என்கிற விவரம் தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக வேளாங்கண்ணி மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்ததோடு, வாகனத்துடன் வெள்ளைத்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com