விருதுநகர் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியைச் சேர்நதவர் மாரீஸ்வரன்(23). இவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்த கசிவு இருந்து வந்ததால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறராம். இதனால், மன அமைதியை இழந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் தூக்கிட்டு கொண்டாராம். இது தொடர்பாக அவரது சகோதரர் செந்தில்குமார்(32) விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு:
திருச்சுழி அருகே இலங்கிப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி(46). இவர் கட்டடங்களில் கம்பி கட்டுநராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை இரவில் இப்பகுதியில் உள்ள ஒரு கட்டடப்பகுதியில் சென்ட்ரிங் போடுவதற்கான கம்பிகளை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அதையடுத்து மேலே தூக்கிச் செல்கையில் மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். இது தொடர்பாக அவரது மனைவி சந்தனமாரி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து தொழிலாளியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.