திருச்சுழி அருகே அரசு பள்ளியில் மடிக்கணினி, மின்சாதன பொருள்கள் திருட்டு

திருச்சுழி அருகே அறைக்கதவை உடைத்து அரசு பள்ளியில் மடிக்கணினி மற்றும் மின்சாதன பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

திருச்சுழி அருகே அறைக்கதவை உடைத்து அரசு பள்ளியில் மடிக்கணினி மற்றும் மின்சாதன பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே புலிக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை தொடங்கியுள்ளன. இதையடுத்து பள்ளி முடிந்து செல்கையில் அனைத்து அறைகளையும் ஆசிரியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். இதையடுத்து, செவ்வாய்கிழமை காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, பள்ளி வளாகத்தில் கணிப்பொறி அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் மடிக்கணினி, ஒலி கூட்டும் மின்சாதன பொருள்கள் ஆகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை கங்காதேவி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பள்ளியின் அறைக்கதவை உடைத்து மடிக்கணினி உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com