விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

விருதுநகர் அருகே ஆற்றுப்பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே ஆற்றுப்பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி ஆற்றுப்பகுதி ஓரத்தில் முதியவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பார்த்த போது 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்து கிடந்தார்.

கிராம மக்களிடம் போலீஸார் விசாரித்தில் முதியவரின் அடையாளம் தெரியவில்லை. பின்னர் முதியவரின் சடலத்தை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து துலுக்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com