

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பரப்பில் காணாமல் போன கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணி 2-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.
மாயமான கடலோரக் காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானத்தை கோடியக்கரையில் பாராமோட்டாரில் பறந்து தேடும்பணி கடலோரக் காவல் படை ஏடிஜிபி சைலோந்திரபாபு முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிலையில்,சனிக்கிழமை காலையிலும் வனப் பரப்புக்குள் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டன.இதில்,வனத்துறை,உள்ளூர் காவல்துறையைச் சேர்ந்த 30 பேர் ஈடுபட்டனர்.ஏடிஜிபி சைலேந்திரபாபு காரைக்கால் வழியே சென்னை சென்றநிலையில், முக்கியமான அதிகாரிகள் பங்கேற்கவில்லை.
இதனிடையே,காரைக்கால் அருகே விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைப்பதாக தகவல் பரவியதையடுத்து தேடும்பணியில் கவனம் குறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.