தஞ்சையில் இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கூட்டம்: மக்கள் பங்கேற்க அழைப்பு

தஞ்சாவூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பொதுமக்களும், மின்நுகர்வோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பொதுமக்களும், மின்நுகர்வோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தஞ்சாவூர் நகரியம் மின்வாரிய இயக்கலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் சீ.கிருஷ்ணவேணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூர் நகர பொதுமக்களின் நலன்கருதி, மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் க.அருள்மொழி தலைமையில், தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் தஞ்சாவூர் நகரியக் கோட்டத்திற்கு உட்பட்ட தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழ வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளித்து பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com