தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 2 கோடி செம்மரக்கட்டைகளை பறிமுதல்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ. 2 கோடி மதிப்பிலான 2 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். சரக்கு பெட்டகத்துக்குள் இரும்பு குண்டுகளுக்கு இடையே செம்மரக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் கடத்தல் காரரர்களுக்கு உடந்தையாக இருந்ததாக மடத்தூரில் உள்ள ஒரு குடோனுக்கு சுங்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
