திருச்சுழி அருகே பள்ளி மாணவன் மாயம் தந்தை புகார்

விருதுநகர் அருகே பள்ளிக்கு போவதாக கூறிச் சென்ற மாணவன் மாயமானது தொடர்பாக வெள்ளிக்கிழமை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். 
Updated on
1 min read

விருதுநகர் அருகே பள்ளிக்கு போவதாக கூறிச் சென்ற மாணவன் மாயமானது தொடர்பாக வெள்ளிக்கிழமை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கரிசல்குளம் காலனியைச் சேர்ந்த பாண்டியின்(41) மகன் மாதவன்(14). இவர் அருகில் உள்ள முத்துராமலிங்காபுரம் கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாராம். இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்றாராம். ஆனால், பள்ளிக்கூடம் விட்ட பின்பும் மாலையி்ல நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். அதில் மாணவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லையாம். உடனே இது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com