மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமசாமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் பழனிக்குமார், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய மக்கள் விரோத பட்ஜெட்டையும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அழகர்சாமி, லிங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 85-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக நகரச் செயலாளர் காதர் முகைதீன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.