திருவப்பூர் திருவிழாவில் 3  பெண்களிடம்  11 பவுன் சங்கிலி திருட்டு

புதுக்கோட்டையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்துகொண்ட 3 பெண்களிடமிருந்து 11 பவுன்  நகைகளை மர்மநபர்கள்
Updated on
1 min read

புதுக்கோட்டையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்துகொண்ட 3 பெண்களிடமிருந்து 11 பவுன்  நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

திருவப்பூர் காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து நடைபெற்ற தேராட்டத்தை காண பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பத்தர்கள் குவிந்தனர் தேரோட்டத்தைப் பார்க்கவந்த புதுக்கோட்டை பழனிப்பா நகரைச் சேர்ந்த மாரியம்மாள்(54)என்பவரிடமிருந்த 2 பவுன் சங்கிலி, திலகர் திடலை சேர்ந்த ராஜேஸ்வரி(65) என்பவரிடமிருந்த 2 பவுன்சங்கிலியும், பொன்னமராவதியிலிருந்து வந்திருந்த கல்யாணி(64) என்பவரிடமிருந்த 7 பவுன் சங்கிலிஉள்பட  மொத்தம் 11 பவுன்  நகைகள் காணாமல்போனது. இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com