மதுரை: முன்விரோதத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

மதுரை சிந்தாமணி அருகேயுள்ளது அயனாபுரம். இவ்வூரைச் சேர்ந்த போஸ் மகன் ரமேஷ் (33). டைல்ஸ் பதிக்கும் கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் ரமேஷுக்கும் பெண் பிரச்னை
Updated on
1 min read

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக வியாழக்கிழை இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

மதுரை சிந்தாமணி அருகேயுள்ளது அயனாபுரம். இவ்வூரைச் சேர்ந்த போஸ் மகன் ரமேஷ் (33). டைல்ஸ் பதிக்கும் கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் ரமேஷுக்கும் பெண் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில் வியாழக்கிழமை காலையில் வேலைக்காக ரமேஷ் பனையூர் விலக்குப் பகுதியில் நடந்துவந்துள்ளார். அப்போது அங்குநின்ற லாரியின் பின்னாலிருந்து வந்த சிலர் திடீரென ரமேஷை கத்தி அரிவாளால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பின்தலை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த ரமேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ரமேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இக்கொலை குறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து சிலரைப் பிடித்து விசாரித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com