விருதுநகர் பகுதியில் மழை

விருதுநகர் பகுதியில் கடந்த சில நாள்களாகவே கோடை வெயிலால் வெக்கையாக இருந்தது. அதனால் பொதுமக்கள் நடமாடமுடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் மாலையில் கருமேக மூட்டத்துடன்
Updated on
1 min read

விருதுநகர் பகுதியில் கடும் வெய்யில் அடித்த நிலையில் சனிக்கிழமை மாலையில் பரவலான மழை பெய்தது.

விருதுநகர் பகுதியில் கடந்த சில நாள்களாகவே கோடை வெயிலால் வெக்கையாக இருந்தது. அதனால் பொதுமக்கள் நடமாடமுடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் மாலையில் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலையில் பரவலான மழை பெய்தது. இதனால் வெக்கை தனிந்து குளிர்ச்சியான நிலையேற்பட்டது.

இம்மழையால் பழைய பேருந்து நிலையத்திற்குள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் புகுந்து துர்நாற்றம் ஏற்பட்டது. தற்போது, பழைய பேருந்து நிலையத்திற்குள் பயணிகள் நிற்குமிடம், தரைப்பகுதியில் பேவர் பிளாக் கற்கள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி ஆகியவை ரூ.1 கோடியில் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com