விருதுநகரில் மகளிர் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட தலைநகரில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கதவடைக்கும்   போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட தலைநகரில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கதவடைக்கும்   போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

விருதுநகர் நீதிமன்ற வளாகம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஜே.எம்.1, ஜே.எம்.2, ஜே.எம்.3 நீதிமன்றங்களுக்கு   வழக்குரைஞர்கள் வந்தனர். பின்னர் அலுவலகங்கள் தவிர்த்து நீதிமன்றங்களின் கதவடைத்தனர். அதையடுத்து, மகளிர் நீதிமன்றத்தை மாவட்ட தலைநகர் விருதுநகரில் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பராம் தலைமையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டதால் நீதிமன்ற பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com