விருதுநகரில் மாரியம்மன் திருக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இவ்விழாவின் உச்சக் கட்ட நிகழ்ச்சியான பக்கதர்கள் நேர்ச்சை
Updated on
1 min read

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இவ்விழாவின் உச்சக் கட்ட நிகழ்ச்சியான பக்கதர்கள் நேர்ச்சை செலுத்தும் வகையில் அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் இரவு அம்மனுக்கு பல்வேறு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதில், இந்து நாடார் தேவஸ்தானத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.15 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் வாகனங்களில் புறப்பாடும், வெவ்வேறு மண்டபங்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5-ம் தேதியும், 6-ம் தேதி கயிறு குத்துதல் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் அக்னிச் சட்டி எடுத்தலும், 7-ம் தேதி தேரோட்ட திருவிழாவும் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஏப்.12-ம் தேதி வரையில் அம்மனுக்கு மண்டகப்படி வழங்கி வழிபாடு நடைபெறும்.

இவ்விழாவை முன்னிட்டு கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொருள்காட்சியும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com